நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
மகளே உன்னைத் தேடி நின்றாளே மங்கை இந்த மங்கல மங்கை
வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை உன் மழலையின் தந்தை
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்தக்
கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்தக்
கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ